காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து 36 பேர் பலி

ஸ்ரீநகர்
காஷ்மீரில் புதன்கிழமை ஒரு பயணிகள் பேருந்து இமயமலை நெடுஞ்சாலையின் செங்குத்தான சரிவில் இருந்து மற்றொரு சாலையில் கவிழ்ந்ததில் 36 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
42 இருக்கைகள் கொண்ட பேருந்து, கிஷ்த்வார் நகரத்திலிருந்து தெற்கு ஜம்மு நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையை விட்டு விலகி, மலைப் பகுதியில் உள்ள பழைய சாலையில் சுமார் 660 அடி உயரத்தில் இருந்து (200 மீட்டர்) கீழே விழுந்ததாக சிவில் நிர்வாகி ஹர்விந்தர் சிங் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள சுகாதார நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆபத்தான நிலையில் குறைந்தது 10 பேர் ஜம்முவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்கான சரியான காரணம் உடனடியாக தெரியவில்லை.



