அமீரக செய்திகள்

நுகர்வோர் உரிமைகளை மீறியதற்காக 3 கார் வாடகை நிறுவனங்கள் மூடல்

நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பான சட்டங்களை மீறியதற்காக 2023-24 ஆம் ஆண்டில் மூன்று துபாய் கார் வாடகை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

“மீறலைப் பொறுத்து, குறைந்தபட்சம் 10,000 திர்ஹம் வரை பல்வேறு வகையான அபராதங்கள் உள்ளன. மீறல் மீண்டும் மீண்டும் செய்தால், ஒவ்வொரு முறையும் அபராதம் இரட்டிப்பாகும். விதிமீறல் மீண்டும் மீண்டும் நடந்தால், அத்தகைய நிறுவனங்களின் அலுவலகங்கள் மூடப்படும் என்று துபாயில் உள்ள பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குனர் தெரிவித்தார்.

மேலும், வாகனத்தை திரும்பப் பெற்ற 30 நாட்களுக்குள் வாடிக்கையாளர் வைப்புத் தொகையைத் திருப்பித் தருமாறு அனைத்து வாகன வாடகை நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button