கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் 14 பேர் பலி

தெற்கு பிலிப்பைன்ஸில் கடந்த வாரத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரப்பூர்வ எண்ணிக்கை வெளியாகியுள்ளது.
நாட்டின் இரண்டாவது பெரிய தீவான மின்டானோவின் சில பகுதிகளை மழை பல வாரங்களாகத் தாக்கியுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவசரகால முகாம்களுக்கு சென்றுள்ளனர்.
தங்கச் சுரங்க மாகாணமான தாவோ டி ஓரோவில் சமீப நாட்களில் குறைந்தது 10 பேர் பலியாகினர்.
“இதுபோன்ற கனமான மற்றும் தொடர்ச்சியான மழையை நான் இதற்கு முன்பு அனுபவித்ததில்லை” என்று மாகாண தகவல் அதிகாரி தெரிவித்தார்.
பருவநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் பிலிப்பைன்ஸ் இடம் பெற்றுள்ளது.
வெப்பமான வளிமண்டலம் அதிக நீரைக் கொண்டிருப்பதால், காலநிலை மாற்றம் தீவிர மழையினால் ஏற்படும் வெள்ளத்தின் அபாயத்தையும் தீவிரத்தையும் அதிகரிக்கிறது.


