1,000 பாலஸ்தீனிய புற்றுநோயாளிகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிகிச்சை- ஜனாதிபதி புதிய உத்தரவு

ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சனிக்கிழமையன்று, 1,000 பாலஸ்தீனிய புற்றுநோயாளிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தப் புதிய உத்தரவு, போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியையில் உள்ள அனைத்து வயதினரையும் சேர்ந்த புற்றுநோய் நோயாளிகளை உள்ளடக்கியது. இந்த அறிவிப்பு 1,000 நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த பாலஸ்தீனிய குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவுவதற்கான ஷேக் முகமதுவின் முந்தைய கட்டளையை விரிவுபடுத்துகிறது.
முன்னதாக, காசாவில் இருந்து முதல் பகுதி குழந்தைகள் மற்றும் பெண்கள் அபுதாபிக்கு வந்து உடனடியாக உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில் சிக்கித் தவிக்கும் பாலஸ்தீனியர்களின் துன்பத்தைப் போக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மனிதாபிமான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி வந்துள்ளது.



