இதுவரை இல்லாத அளவில் லாபம் ஈட்டிய எமிரேட்ஸ் நிறுவனம்!

துபாயின் எமிரேட்ஸ் குழுமம் அதன் மிகச்சிறந்த அரையாண்டு நிதி முடிவை அறிவித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் Dh10.1 பில்லியன் நிகர லாபத்தைப் பதிவுசெய்துள்ளது. இது கடந்த ஆண்டின் Dh4.2 பில்லியனை விட 138 சதவிகிதம் அதிகமாகும். குழுவானது Dh20.6 பில்லியன் EBITDA ஐப் பதிவுசெய்துள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலத்தில் பதிவு செய்யப்பட்ட Dh15.3 பில்லியனை விட அதிகம்.
குழு வருவாய் 2023-24 முதல் ஆறு மாதங்களில் 67.3 பில்லியனாக இருந்தது, இது கடந்த ஆண்டு 56.3 பில்லியனில் இருந்து 20 சதவீதம் அதிகமாகும். உலகெங்கிலும் உள்ள விமானப் போக்குவரத்திற்கான வலுவான தேவையால் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மார்ச் 31, 2023 அன்று இருந்த 42.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில், 2023-24 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் செப்டம்பர் 30, 2023 அன்று Dh42.7 பில்லியனை உறுதியான பண நிலையுடன் குழு நிறைவு செய்தது.
எமிரேட்ஸ் தனது கோவிட்-19 தொடர்பான கடன்களில் 9.2 பில்லியன் திர்ஹம்களை திருப்பிச் செலுத்தியுள்ளது. குழுமம் அதன் 2022-23 நிதியாண்டின் இறுதியில் அறிவிக்கப்பட்டபடி அதன் உரிமையாளருக்கு 4.5 பில்லியன் திர்ஹம்களை ஈவுத்தொகையாக வழங்கியது.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் குழுமத்தின் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் கூறியதாவது:- “தொற்றுநோயின் இருண்ட நாட்களில் இருந்து வலுவாகவும் சிறப்பாகவும் திரும்புவதற்கான எங்கள் திட்டங்களின் பலனை நாங்கள் காண்கிறோம். குழு எங்கள் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது. 2023-24 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் எங்களின் லாபம் 2022-23 ல் எங்களின் சாதனை முழு ஆண்டு லாபத்துடன் கிட்டத்தட்ட பொருந்தியுள்ளது. இது நிறுவனத்தில் உள்ள திறமை, அர்ப்பணிப்பு, வலிமையைப் பறைசாற்றும் மிகப்பெரிய சாதனையாகும். எங்கள் வணிக மாதிரி, துபாயின் பார்வை, கொள்கைகளின் சக்தி ஆகியவை முற்போக்கான விமானத் துறையை உருவாக்க உதவியது” என்று கூறினார்.



