‘விபத்துக்கள் இல்லாத ஒரு நாள்’ பிரச்சாரம்: பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க துபாய் காவல்துறை அறிவுறுத்தல்

துபாய் காவல்துறை , ‘விபத்துக்கள் இல்லாத ஒரு நாள்’ என்ற கோரிக்கையை வெள்ளிக்கிழமையன்று ஒரு குறுஞ்செய்தி மூலம் அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை பள்ளியைத் தடையின்றி மற்றும் அசம்பாவிதம் இல்லாமல் தொடங்குவதை உறுதி செய்வதற்காக யுஏஇ முழுவதும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளது.
“இன்றும் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக இருங்கள். ஆகஸ்ட் 28, 2023 ‘விபத்து இல்லாத நாள்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பாதுகாப்பான சாலைகளுக்கு எங்களுடன் சேருங்கள்” என்று குறுஞ்செய்தி கூறுகிறது.
பாதுகாப்பு உறுதிமொழி
போக்குவரத்து விபத்துக்கள் இல்லாமல் ஒரு நாளை அடைய ஆறு நினைவூட்டல்களுடன் பாதுகாப்பு உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
- முன்னே செல்லும் வாகனங்களுடன் பாதுகாப்பான தூரத்தை விட்டுச் செல்வேன்
- சாலையைக் கடக்கும் பாதசாரிகளுக்கு வழி விடுகிறேன்
- நான் என் சீட் பெல்ட்டை அணிந்து கொள்வேன்.
- வேக வரம்பை மதிக்கிறேன்
- வாகனம் ஓட்டும்போது கையடக்க மொபைல் போன் பயன்படுத்த மாட்டேன்
- அவசரநிலை, காவல்துறை மற்றும் பொது சேவை வாகனங்கள் அல்லது உத்தியோகபூர்வ கான்வாய்களுக்கு நான் வழிவிடுகிறேன்
அனைத்து ஓட்டுநர்களும் பள்ளி வலயங்களில் வேக வரம்புகளை கடைபிடிக்க வேண்டும். அலைபேசிகளைப் பயன்படுத்துவது போன்ற கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். வாகன ஓட்டிகள் எப்போதும் நியமிக்கப்பட்ட பாதைகளை கடைபிடிக்க வேண்டும் மற்றும் சோர்வாக வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். பள்ளி மண்டலங்களில் வேக வரம்புகளை மீறினால் 300 முதல் 3,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும்.



