ரோபோடிக்ஸ் மற்றும் கணினி அறிவியல் படிப்பில் புதிய திட்டங்கள்- செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் அறிவிப்பு

அபுதாபியின் முகமது பின் சயீத் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் (MBZUAI) இரண்டு புதிய திட்டங்கள் மற்றும் நான்கு தொடர்புடைய திட்டங்களை ரோபோடிக்ஸ் மற்றும் கணினி அறிவியலில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த துறைகள் உலகளாவிய தேவையை பூர்த்தி செய்யும்.
புதிய துறைகள், செயற்கை நுண்ணறிவு (AI), ரோபாட்டிக்ஸ் மற்றும் கணினி அறிவியலில் கணினி பார்வை (CV), இயந்திர கற்றல் (ML), மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் (NLP) போன்ற பாடங்களை இணைக்கும் துறைகளாகும்.
பல்கலைக்கழகம் கணினி அறிவியல் மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றில் இரண்டு ஆண்டு முதுகலை திட்டங்களையும் (கட்டாய ஆறு வார பயிற்சியுடன்), மற்றும் நான்கு ஆண்டு பிஎச்டி (கட்டாய மூன்று மாத பயிற்சியுடன்) திட்டங்களையும் தொடங்கியுள்ளது.
புதிய திட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பரந்த AI சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் மேம்படுத்தவும், AI ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான சர்வதேச மையமாக அதன் நிலையை வலுப்படுத்தவும் உதவும். 2024-ம் ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும்.



