இந்தியா செய்திகள்விளையாட்டு

தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளில் பாலியல் புகார்கள் குழு இல்லை; காற்றில் பறக்கும் விதிகள்

ஜந்தர் மந்தரில் கிட்டத்தட்ட 24×7 (24 மணி நேரம்) என்ற அளவில் 11 நாட்களை கடந்து போராட்டம் தொடர்ந்து வருகிறது; எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உச்ச நீதிமன்றக் கதவு தட்டப்பட்டது; முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர் புகார்களை கடுமையாக எதிர்த்து வரும் நிலையிலும் கூட, பாலியல் துன்புறுத்தல் புகார்களுக்கு தங்கள் ஆதரவைக் கொடுக்குமாறு சக விளையாட்டு வீரர்களுக்கு மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

ஆவணங்களின்படி, மற்றும், சட்டப்படி, இதுபோன்று போராட்டம் நடக்க வேண்டியதில்லை.

உண்மையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பா.ஜ.க எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக நாட்டின் சில முன்னணி மல்யுத்த வீரர்கள் சுமத்திய பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்த எம்.சி மேரி கோம் தலைமையிலான அரசாங்க குழு, ஒரு “முக்கிய குறைபாட்டை” சுட்டிக் காட்டியுள்ளது: 2013 ஆம் ஆண்டு பாலியல் துன்புறுத்தல் தடுப்பு (PoSH) சட்டத்தால் கட்டாயம் நிறுவப்பட வேண்டிய உள் புகார்கள் குழு (ICC) மல்யுத்த அமைப்பில் இல்லை.

மல்யுத்த அமைப்பு மட்டும் சட்டத்தை மீறவில்லை.

2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பங்கேற்றுள்ள 30 தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகளில் 16 கூட்டமைப்புகள் இந்தக் கட்டாய உள் புகார்கள் குழு அமைத்தல் நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது, விளையாட்டுகளில் பெண்களின் பங்கேற்பில் சாதனை முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் போது. இந்த வளர்ந்து வரும் போக்கின் குறியீடு, கேலோ இந்தியா விளையாட்டுகளில் (Khelo India Games) பெண்களின் எண்ணிக்கை 2018 முதல் 2020 வரை 161 சதவீதம் அதிகரிப்பைக் காட்டியது.

பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடச் சூழலை உருவாக்கத் தேவையான முக்கிய அங்கமான PoSH சட்டத்தின் கீழ் எந்தவொரு குறைகளுக்கும் அழைப்பு விடுக்கும் முதல் அமைப்பாக உள் புகார்கள் குழு வடிவமைக்கப்பட்டுள்ளது. சட்டத்தின்படி, இது குறைந்தபட்சம் நான்கு உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும். அவர்களில் குறைந்தது பாதி பெண்கள் மற்றும் ஒருவர் வெளிப்புற உறுப்பினராக இருக்க வேண்டும், வெளிப்புற நபரை பொறுத்தவரை தன்னார்வ தொண்டு நிறுவனம் அல்லது பெண்களின் அதிகாரத்திற்காக செயல்படும் சங்கம் அல்லது வழக்கறிஞர் போன்ற பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பிரச்சனைகளை நன்கு அறிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Gulf News Tamil
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா
#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button