நிலையற்ற வானிலை காரணமாக பேருந்து சேவை பாதிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பேருந்து சேவையை பயன்படுத்தும் பயணிகள் நிலையற்ற வானிலைக்கு மத்தியில் தங்கள் இடங்களுக்குச் செல்லும் சேவைகளின் நிலையைச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். .
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (ஆர்டிஏ) அதன் சில இன்டர்சிட்டி பேருந்து வழித்தடங்களை நிறுத்துவதாக இன்று அறிவித்துள்ளது.
ஒரு அறிவிப்பில், துபாயில் இருந்து ஷார்ஜாவிற்கு செல்லும் E315 மற்றும் அஜ்மானுக்கு செல்லும் E411 பொது பேருந்துகள் ” மறு அறிவிப்பு வரும் வரை” இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பெய்த கனமழை காரணமாக நாட்டின் பல சாலைகளில் மழைநீர் நிரம்பி போக்குவரத்து ஸ்தம்பித்தது. குறிப்பாக துபாயில் ஷேக் சயீத் சாலை பாதிக்கப்பட்டது.
ஷார்ஜாவுக்குச் செல்பவர்கள் ஷேக் முகமது பின் சயீத் சாலையின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது குறித்து எச்சரிக்கப்பட்டனர்.



