அமீரக செய்திகள்

பாலஸ்தீனிய குழந்தைகள் மற்றும் புற்றுநோயாளிகளின் 6-வது குழு ஐக்கிய அரபு அமீரகம் வந்தடைந்தது

UAE:
காசா பகுதியில் காயமடைந்த 1,000 குழந்தைகளுக்கும், 1,000 புற்றுநோயாளிகளுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை அளிக்க, ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் உத்தரவிட்டிருந்த நிலையில், காயமடைந்த பாலஸ்தீனிய குழந்தைகள் மற்றும் புற்றுநோயாளிகளின் ஆறாவது குழு செவ்வாயன்று ஐக்கிய அரபு அமீரகம் வந்தடைந்தது.

எகிப்து அரபுக் குடியரசில் உள்ள அல் அரிஷ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது, அவசர மருத்துவ உதவி தேவைப்படும் 61 குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 71 உறுப்பினர்கள் வந்துள்ளனர்.

நெருக்கடி வெடித்ததில் இருந்து, UAE உடனடியாக காசா பகுதிக்கு அவசர மனிதாபிமான உதவி மற்றும் பொருட்களை வழங்கியது. புத்திசாலித்தனமான தலைமையின் வழிகாட்டுதலின் கீழ், பாலஸ்தீனிய மக்களுக்கு மனிதாபிமான ஆதரவை வழங்குவதற்காக நவம்பர் 5 அன்று “காலண்ட் நைட் 3” மனிதாபிமான நடவடிக்கை தொடங்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகம் 131 விமானங்களையும் 14,000 டன்களுக்கும் அதிகமான உணவு, மருத்துவம் மற்றும் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது, மேலும் காசா பகுதிக்குள் 150 படுக்கைகள் கொண்ட ஒரு கள மருத்துவமனையை நிறுவியுள்ளது மற்றும் எகிப்திய ரஃபா பிராந்தியத்தில் 3 நீர் உப்புநீக்கும் ஆலைகளை தொடங்கியுள்ளது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button