டெய்ராவில் இன்று வருடாந்திர ‘ரமலான் சூக்’ துவங்கியது!

டெய்ராவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய முனிசிபாலிட்டி தெருவில், பிப்ரவரி 17, சனிக்கிழமையன்று வருடாந்திர ‘ரம்ஜான் சூக்’ துவங்கியது. துபாய் முனிசிபாலிட்டியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சூக் துபாயில் புனிதமான ரமலான் மாதத்தின் வருகையைக் கொண்டாடும் ஒரு பாரம்பரியமாகும்.
ரமலான் சூக் மார்ச் 9ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். ரமலான் தயாரிப்புகளுக்கு தேவையான பல்வேறு பொருட்கள் மற்றும் கேஜெட்களை ரமலான் சூக் வழங்குகிறது. ஷாப்பிங் செய்பவர்கள் தனிப்பட்ட மற்றும் வீட்டு அத்தியாவசியப் பொருட்களைக் காணலாம் மேலும் ‘ஹாக் அல் லைலா’வைக் கொண்டாடுவதற்கான சிறப்பு தயாரிப்புகளும், நிகழ்வுகள், நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் குழந்தைகளுக்கான செயல்பாடுகளும் இருக்கும்.
சுற்றுலா மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக மட்டுமல்லாமல், பாரம்பரிய சந்தைகளை காட்சிப்படுத்தவும், ஆசீர்வதிக்கப்பட்ட ரமலான் மாதத்திற்கான தயாரிப்புகளுடன் தொடர்புடைய பழமையான பழக்கவழக்கங்களின் பாரம்பரியத்தையும் நம்பகத்தன்மையையும் பாதுகாப்பதற்காகவும் ஆண்டுதோறும் ‘ரமலான் சூக்’ ஏற்பாடு செய்யப்படுவதாக துபாய் நகராட்சி தெரிவித்துள்ளது.



