2023-ல் மிகவும் பரபரப்பான சர்வதேச விமான நிலையமாக உள்ள DXB!!

துபாய் இன்டர்நேஷனல் (DXB) 2023 ஆம் ஆண்டில் 56.5 மில்லியன் பயணிகளுடன் மிகவும் பரபரப்பான சர்வதேச விமான நிலையமாக இருப்பதாக விமான ஆலோசனை OAG வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
OAG-ன் படி, லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் (LHR) 46.5 மில்லியன் பயணிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் 37.17 மில்லியன் பயணிகளுடன் 3 வது இடம், பாரிஸ் சார்லஸ் டி. கோல் விமான நிலையம் 36.67 மில்லியன் பயணிகளுடன் 4 வது இடம், சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையம் 36.13 மில்லியன் பயணிகளுடன் 5 வது இடத்தை பிடித்துள்ளது.
இஸ்தான்புல் விமான நிலையம், சியோல் இன்சியான் சர்வதேச விமான நிலையம், பிராங்பேர்ட் விமான நிலையம், தோஹா சர்வதேச விமான நிலையம் மற்றும் மாட்ரிட் அடோல்போ சுரேஸ்-பராஜஸ் விமான நிலையம் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.



