Site icon Tamil Gulf

காசா போர்நிறுத்தத்தை வரவேற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்; நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படும் என நம்பிக்கை

You can apply online for visa amnesty through app, website

UAE: காசா பகுதியில் போர்நிறுத்தம் மற்றும் பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கான அறிவிப்பை ஐக்கிய அரபு அமீரகம் இன்று வரவேற்றது. இதனால் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படும் என அமீரகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான ஒரு அறிக்கையில், இந்த ஒப்பந்தத்தை அடைய கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்காவின் முயற்சிகளை வெளியுறவு அமைச்சகம் பாராட்டியது. இது நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தத்தை விதிக்கிறது. சண்டையில் இந்த இடைநிறுத்தம் மற்றும் கைதிகளின் பரிமாற்றம், நிவாரணப் பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உதவும் .

இது “நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், பாலஸ்தீனிய மக்களை மேலும் துன்பத்தில் இருந்து விடுவிப்பதற்கும் வழி வகுக்கும்” என்று அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை பாதுகாப்பான, தடையின்றி நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு பங்களிக்கும். குறிப்பாக இது மிகவும் பாதிக்கப்படக்கூடிய நோயாளிகள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு உதவும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், காசாவில் மனித துன்பங்களைத் தணிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் இரட்டிப்பாக்க ஐ.நா மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்துடன் தொடர்ந்து பணியாற்றும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version