Site icon Tamil Gulf

UAE: காசாவைச் சேர்ந்த இரண்டு வயதான புற்றுநோயாளிகள் உயிரிழப்பு

2 killed in roof collapse of school; 3 people were injured

UAE:
காசாவைச் சேர்ந்த இரண்டு வயதான புற்றுநோயாளிகள் செவ்வாய்க்கிழமை காலமானதாக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) அறிவித்துள்ளது. இரண்டு நோயாளிகளும் மேம்பட்ட நிலை புற்றுநோயுடன் போராடி, ஆபத்தான நிலையில் இருந்தனர். அவர்களில் ஒருவருக்கு 58 வயது, மற்றவருக்கு 63 வயது என்று MoHAPகூறியது.

ஜனாதிபதி ஹிஸ் ஹைனஸ் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களால் உத்தரவிடப்பட்ட நாட்டின் மனிதாபிமான முயற்சியின் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அவசர மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக காசா பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான காயமடைந்த மற்றும் புற்றுநோயாளிகள் சிகிச்சைக்காக வந்தனர். அவர்களில் தற்போது உயிரிழந்த இரு வயதான நோயாளிகளும் அடங்குவர்.

MoHAP கூறியதாவது:- “நாட்டிற்கு அவர்கள் வந்தவுடன், அவர்கள் மேல் சிகிச்சைக்காக உடனடியாக ஒரு சிறப்பு மருத்துவ வசதிக்கு மாற்றப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, மருத்துவ நிபுணர்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், அவர்களின் உடல்நிலை மோசமடைந்தது, இறுதியில் அவர்கள் உயிரிழப்பை சந்திக்க நேரிட்டது.”

“எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் ஆன்மா நித்திய அமைதியில் இளைப்பாறவும், அவர்களின் குடும்பங்களுக்கு பொறுமை மற்றும் ஆறுதலைத் தரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்” என்று அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

Exit mobile version