Site icon Tamil Gulf

ஷார்ஜாவில் பாலைவன விபத்தில் ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்

Gulf News Tamil

ஷார்ஜாவில் நேற்று மாலை, “மணல் குன்றுகளில் ஏறும்” போது ஏற்பட்ட விபத்தில் ஆசிய நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் காயமடைந்தார் என்று உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஷார்ஜா போலீஸ் கமாண்டர்-இன்-சீஃப் மேஜர் ஜெனரல் சைஃப் அல் ஜாரி அல் ஷம்சி கூறியதாவது:- “மழைக்காலத்தை அனுபவிக்க ஏராளமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பாலைவன பகுதிகளுக்கு விடுமுறை நாட்களில் செல்கின்றனர். அவர்கள் மணல் மலைகளில் சவாரி செய்யும் போது தவறான நடைமுறைகளில் ஈடுபடுகிறார்கள், இது பல விபத்துக்களுக்கு வழி செய்கிறது மற்றும் அவர்களின் உயிரையும் மற்றவர்களின் உயிரையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது.”

குளிர்காலத்தில் குடும்பங்கள் தங்களின் நான்கு சக்கர வாகனங்கள் அல்லது மோட்டார் சைக்கிள்களுடன் வானிலையை அனுபவிக்க அடிக்கடி பாலைவன பகுதிகளுக்கு செல்கின்றனர். இருப்பினும், பாதுகாப்பு என்பது பகிரப்பட்ட பொறுப்பு, பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Exit mobile version