ரமலான் பிறை காணப்பட்டதைத் தொடர்ந்து மார்ச் 11 திங்கள் அன்று நாட்டில் ரமலான் முதல் நாள் குறிக்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ஷேக் முகமது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன் X-ல் வாழ்த்து செய்திகளை வெளியிட்டுள்ளார்.
“ரம்ஜான் தொடங்கும் நிலையில், புனித மாதத்தைக் கடைப்பிடிக்கும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
சிந்தித்தல் மற்றும் பிரார்த்தனையின் இந்த காலகட்டம் எங்களை நெருக்கமாக கொண்டு வரட்டும். நமது ஒற்றுமை மற்றும் இரக்கத்தின் பிணைப்புகளை வலுப்படுத்தட்டும். அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியால் நிரப்பப்பட்ட ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட ரமலான் வாழ்த்துக்கள்.” என்று கூறினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமும் X-ல் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
“புனித மாதத்தின் வருகையில் எமிரேட்ஸ் மக்கள், அனைத்து அரபு மற்றும் இஸ்லாமிய மக்களை நாங்கள் வாழ்த்துகிறோம், நமது சமூகங்களின் ஒற்றுமையை வலுப்படுத்தவும், நமது குடும்ப உறவுகளைப் புதுப்பிக்கவும், அதே போல் நன்மதிப்பு மற்றும் நன்கொடையின் மதிப்புகளை நமக்குள் வளர்ப்பதற்கும் ரமலான் ஒரு வாய்ப்பாகும்” என்று அவர் கூறினார்.
ரம்ஜான் மாதம் தொழுகை மற்றும் நோன்பின் மாதம் மட்டுமல்ல… இஸ்லாமியர்களிடையே அன்பும், அமைதியும், ஒற்றுமையும் நிலவுகிறது.