Site icon Tamil Gulf

UAE: மழை வெள்ளம் காரணமாக விரிவான மோட்டார் காப்பீட்டுக்கான தேவை அதிகரிப்பு

Insurance companies hiked natural calamity premiums by up to 50%

UAE:
வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர்களுக்கு எதிராக வாகன ஓட்டிகள் பாதுகாப்பை கோருவதால் விரிவான மோட்டார் காப்பீட்டுக்கான தேவை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அதிகரித்துள்ளது என்று தொழில்துறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பலத்த மழை பெய்தது, இதன் விளைவாக நாட்டின் பல பகுதிகளில் சாலைகள் மற்றும் வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. வெள்ளம் மற்றும் மழை காரணமாக வாகனங்களின் இன்ஜின்கள் மற்றும் பிற பாகங்கள் சேதமடைந்து, வாகன ஓட்டிகள் கடும் நஷ்டம் அடைந்தனர்.

Insurancemarket.ae இன் CEO அவினாஷ் பாபர் இது தொடர்பாக கூறுகையில், கடந்த வாரம் பெய்த மழையைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் க்ளைம்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இயற்கை சீற்றங்கள், மழை மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு எதிராக காப்பீடு பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த உரிமைகோரல்கள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் வாகனங்களை ஓட்டுவது, வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவது மற்றும் தண்ணீர் கசிவு ஏற்பட்டும் வீடுகளில் வாகனங்களை நிறுத்துவது ஆகியவை ஆகும்.

பழுதடைவதைத் தடுக்க, தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் வாகனங்களை ஓட்ட வேண்டாம் என்றும், வெள்ளம் அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லவும் அவர் அறிவுறுத்தினார்.

Sukoon Insurance-ன் நுகர்வோர் லைன்ஸ் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் EVP தலைவர் ஜூலியன் ஆட்ரிரி கூறுகையில், கடந்த 3-4 ஆண்டுகளில் அடிக்கடி ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் கனமழை போன்ற வானிலை நிகழ்வுகள் விரிவான மோட்டார் காப்பீட்டுக்கான தேவையை அதிகப்படுத்தியுள்ளது.

விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனத்தின் ஒரு பகுதியாக வெள்ளம் மற்றும் பிற இயற்கை பேரிடர்களுக்கு எதிராக பாதுகாப்பைக் கோருவதும் அதிகரித்து வருகிறது.

தனிப்பட்ட வாகனங்கள் வெள்ளம், புயல், ஆலங்கட்டி மழை போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கு எதிராக விரிவான மோட்டார் கவரை பயன்படுத்தலாம் என்று ஜூலியன் ஆட்ரிரி பரிந்துரைத்தார்.

மூன்றாம் நபர் காப்பீட்டைத் தேர்ந்தெடுக்கும் வாகன உரிமையாளர்கள், மழை அல்லது வெள்ளம் தொடர்பான சம்பவங்களின் விளைவாக தங்கள் வாகனங்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு இன்சூரன்ஸ் கோர முடியாது.

இதேபோல், வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் எதிர்பாராத வானிலை தொடர்பான சம்பவங்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும், ஏனெனில் சில நேரங்களில் சேதங்கள் பல்லாயிரக்கணக்கான திர்ஹாம்களாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.

Exit mobile version