Site icon Tamil Gulf

UAE: பாலஸ்தீனிய குழந்தைகள் மற்றும் புற்றுநோயாளிகளின் நான்காவது குழு தரையிறங்கியது

UAE: Fourth batch of Palestinian children and cancer patients landed

UAE: காயமடைந்த 1,000 குழந்தைகள் மற்றும் 1,000 புற்றுநோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், காயமடைந்த பாலஸ்தீனிய குழந்தைகள் மற்றும் புற்றுநோயாளிகளின் நான்காவது குழு சனிக்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வந்தடைந்தது.

எகிப்தில் உள்ள அல் அரிஷ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது, அவசர மருத்துவ உதவி தேவைப்படும் 77 குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த 43 உறுப்பினர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வந்தடைந்தனர்.

நெருக்கடி வெடித்ததில் இருந்து, UAE உடனடியாக காசா பகுதிக்கு அவசர மனிதாபிமான உதவி மற்றும் பொருட்களை வழங்கியது. இந்த நிலையில், 20 மில்லியன் டாலர் மனிதாபிமான உதவித் தொகையை ஒதுக்குமாறு ஷேக் முகமது உத்தரவு பிறப்பித்தார். “Gallant Knight 3” நடவடிக்கையின் ஒரு பகுதியாக காசா பகுதிக்குள் ஒரு ஒருங்கிணைந்த கள மருத்துவமனையை நிறுவவும் அவர் உத்தரவிட்டார்.

இந்த முன்முயற்சிகள், பாலஸ்தீனிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், நடந்துகொண்டிருக்கும் மனிதாபிமான நெருக்கடியின் தீவிரத்தை குறைப்பதற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அசைக்க முடியாத அணுகுமுறை மற்றும் வரலாற்று அர்ப்பணிப்பை உள்ளடக்கியது.

இந்த முயற்சிகள் சகோதர பாலஸ்தீனிய மக்களுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உறுதியான ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது.

Exit mobile version