UAE: ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் நிலவும் நிலைமைகள் மற்றும் அவற்றின் மனிதாபிமான விளைவுகள் குறித்து வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டெரஸுடன் தொலைப்பேசி அழைப்பின் போது விவாதித்தார்.
ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான், பிராந்தியத்தில் தீவிரவாதம், பதட்டங்கள் மற்றும் அதிகரித்து வரும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச சமூகத்தின் முயற்சிகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும் அனைத்து பொதுமக்களின் உயிர்களையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
காசா மக்களின் தேவைகளுக்கு மனிதாபிமானப் பதிலை வலுப்படுத்துவது, அவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுவதை உறுதிசெய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.