Site icon Tamil Gulf

நாட்டில் உள்கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்ய ஐக்கிய அரபு அமீரக அதிபர் உத்தரவு

President congratulates students, teachers and parents for the new academic year

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரலாறு காணாத மழை பெய்ததைத் தொடர்ந்து, அனைத்து எமிரேட்களும் இயற்கை பேரழிவின் தாக்கத்தில் சிக்கித் தவிக்கின்றன. குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பே நாட்டின் முதன்மையான முன்னுரிமை என்று கூறிய ஜனாதிபதி, அதனைத் தொடர்ந்து நாட்டின் உள்கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ஆதரவை வழங்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறும் ஷேக் முகமது பின் சயீத் உத்தரவிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், அனைத்து மக்களின் பாதுகாப்பிற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியின் கவனிப்பு மற்றும் தலைமையின் கீழ் நாடு “நல்ல ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில்” உள்ளது என்று அவர் கூறினார்.

மேலும், “குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் அர்ப்பணிப்புக் குழுக்களின்” முயற்சிகளை பாராட்டினார்.

இறுதியாக,”நெருக்கடிகள் நாடுகள் மற்றும் சமூகங்களின் வலிமையை வெளிப்படுத்துகின்றன… மேலும் நாம் அனுபவித்த இயற்கையான காலநிலை நெருக்கடி, நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் அதன் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடமிருந்து மிகுந்த அக்கறை, விழிப்புணர்வு, ஒற்றுமை மற்றும் அன்பைக் காட்டியது. கடவுள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அதன் சமூகத்தை பாதுகாத்து அதன் பெருமை மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்தட்டும்.” என்று கூறினார்.

Exit mobile version