Site icon Tamil Gulf

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 686 கைதிகளை விடுவிக்க துபாய் ஆட்சியாளர் உத்தரவு

Dubai Women Establishment

துபாயின் ஆட்சியாளர் என்ற முறையில், துணைத் தலைவரும் பிரதமருமான ஹிஸ் ஹைனஸ் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், ஈத் அல் அதாவை முன்னிட்டு, துபாயின் சீர்திருத்த மற்றும் தண்டனை நிறுவனங்களில் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 686 கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

துபாய் அதிபர் அட்டர்னி ஜெனரல் எஸ்ஸாம் இசா அல்-ஹுமைதான் கூறுகையில், ஷேக் முகமது கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது அவர்களின் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதிலும், புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கும், சமூகத்தில் தங்களை மீண்டும் இணைத்துக்கொள்வதற்கும் அவர் காட்டும் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது என்றும் கூறினார்.

துபாய் காவல்துறையுடன் இணைந்து துபாய் பப்ளிக் பிராசிகியூஷன், ஹிஸ் ஹைனஸ் ஷேக் முகமதுவின் உத்தரவை அமல்படுத்துவதற்கான சட்ட நடைமுறைகளை தொடங்கியுள்ளது என்று அல்-ஹுமைதான் மேலும் கூறினார்.

Exit mobile version