Site icon Tamil Gulf

இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி

Three children were killed when a diesel tanker collided with a car

சவுதி அரேபியாவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வடக்கு சவுதி அரேபியாவில் உள்ள தபூக்கில் திங்கள்கிழமை ஏற்பட்ட இந்த மோதலில் பலியானவர்கள் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த மாத தொடக்கத்தில், தென்மேற்கு சவுதி அரேபியாவில் மூன்று கார்கள் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர். கடந்த மாதம், சவுதி அரேபியாவின் தென்மேற்கு நகரமான அல் பஹாவில் கார்கள் மோதியதில் ஒரு வெளிநாட்டவர் கொல்லப்பட்டார் மற்றும் நான்கு சவுதியர்கள் காயமடைந்தனர்.

சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிரான அபராதங்களை சவுதி அதிகாரிகள் கடுமையாக்கியுள்ளனர். 2016 ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளில் போக்குவரத்து இறப்புகள் சுமார் 35 சதவீதம் குறைந்துள்ளது.

Exit mobile version