Site icon Tamil Gulf

அரசு ஊழியர்களுக்கான தொலைதூர வேலை வெள்ளிக்கிழமை வரை நீட்டிப்பு

Remote work for government employees extended till Friday

நிலையற்ற வானிலை எமிரேட்ஸை பாதித்ததை அடுத்து, நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு தொலைதூர பணியை ஐக்கிய அரபு அமீரகம் நீட்டித்துள்ளது.

ரிமோட் வேலை, வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் பணியிடத்தில் இருக்க வேண்டிய பணியாளர்களைத் தவிர அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை முதல், அத்தியாவசியத் துறைகளைத் தவிர, நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் தொலைதூரத்தில் இயங்குகின்றன .

தனியார் துறை நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சிலர் தங்கள் கடமைகளை நிறைவேற்ற புயலை தைரியமாக எதிர் கொள்ள வேண்டியிருந்தது.

Exit mobile version