Site icon Tamil Gulf

காசாவில் போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்க ஜனாதிபதியின் முயற்சிக்கு ஓமன் வரவேற்பு

919 foreigners were deported from Oman in June

மஸ்கட்: காசா பகுதியில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மேற்கொண்ட முயற்சியை ஓமன் சுல்தானட் வரவேற்றுள்ளது. கத்தார் அரசு மற்றும் எகிப்து அரபுக் குடியரசின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பில் இந்த முயற்சி முடிவுக்கு வந்தது.

இன்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் ஓமன் தனது ஆதரவை உறுதிப்படுத்தியது. பாலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகள் மற்றும் அவர்களின் அபிலாஷைகளைப் பாதுகாக்கும் வகையிலும், அவர்களின் துன்பங்களைத் தணிக்கும் வகையிலும் இது போன்ற முன்முயற்சிகளை சாதகமாக கையாளுமாறு அனைத்துத் தரப்பினரையும் ஓமன் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கை இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், காசா பகுதியில் இருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாக வெளியேறுவதற்கு வழிவகுக்கும் என்றும், காசா பகுதியின் புனரமைப்புக்கும், அந்தப் பகுதியில் இயல்பு நிலை திரும்புவதற்கும் வழி வகுக்கும் என்று ஓமன் நம்புகிறது.

பாலஸ்தீன மக்கள் தங்களின் நியாயமான உரிமைகளை மீண்டும் பெறுவதற்கும், அல் குத்ஸ் அ ஷர்கியா (கிழக்கு ஜெருசலேம்) தலைநகராகக் கொண்டு அவர்களின் சுதந்திர அரசை நிறுவுவதற்கும் இந்த முயற்சி முன்னோடியாக இருக்கும் என்றும் ஓமன் நம்புகிறது.

Exit mobile version