Site icon Tamil Gulf

சமூக வலைதளங்களில் போலியான வேலை விளம்பரங்கள் குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை

Saudi Arabia: More than 70,000 job openings on new integrated employment platform

புதிய போலி வேலை விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருவதாக ராஸ் அல் கைமா காவல்துறை எச்சரித்துள்ளது. புதிய மோசடி குறித்து குடியிருப்பாளர்களுக்கு அதிகாரிகள் Instagram மில் தெளிவாக கூறியுள்ளனர்.

இந்த மோசடிகள் எவ்வாறு 5 படிகளில் செயல்படுகின்றன என்று அந்த பதிவில் விவரிக்கப்பட்டுள்ளன.

1. ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்களில் ஒரு போலி வேலை அறிவிக்கப்படுகிறது.

2. இந்த வேலைக்கு பாதிக்கப்பட்டவர்கள் பதிவு செய்கிறார்கள்.

3. ஒரு நிறுவனத்தின் விற்பனைத் துறைக்கான வேலை என்று விண்ணப்பதாரர் நம்ப வைக்கப்படுகிறார்.

4. பணம் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது.

5. பணம் சட்டவிரோதமானது என்பதை அறியாமல் விண்ணப்பதாரர் தனது பணிக்காக வெகுமதியைப் பெறுகிறார்.

இதுபோன்ற மோசடியில் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கும் குடியிருப்பாளர்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அதிகாரம் வலியுறுத்தியுள்ளது. ஏனென்றால், பாதிக்கப்பட்டவர் கூட சட்டப் பொறுப்புக்கு உட்பட்டவர் ஆவார்.

Exit mobile version