Site icon Tamil Gulf

ஷார்ஜா மசூதியில் புதிதாகப் பிறந்த குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிப்பு

Notification of new guidelines for newborn screening

ஷார்ஜாவின் அல் மஜாஸ் 1ல் உள்ள ஒரு மசூதியின் பெண்கள் பூஜை அறையில் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த குழந்தை, மசூதி காவலரால் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரி கூறினார். காவலாளி தொழுகைக்குச் சென்று கொண்டிருந்தபோது குழந்தை அழுவதைக் கண்டார். பின்னர் அவர் ஷார்ஜா காவல்துறையின் செயல்பாட்டு அறையை தொடர்புகொண்டார்.

போலீஸ் ரோந்து கார் மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை அல் காசிமி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.

இதையடுத்து குழந்தையின் தாயை கண்டுபிடிக்க ஷார்ஜா போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை மருத்துவமனையின் ஐசியூவில் உள்ளது.

“குழந்தையை குழந்தைகள் பாதுகாப்புக் குழுவிடம் ஒப்படைப்பதற்கு முன், மருத்துவமனை குழந்தைக்கு தேவையான அனைத்து சிகிச்சைகள், தடுப்பூசிகள் மற்றும் முழுமையான மருத்துவ பரிசோதனையை வழங்கும்” என்று காவல்துறை அதிகாரி மேலும் கூறினார்.

Exit mobile version