ஒரு குழந்தையைத் தாக்கியதற்காக ஒரு பெண்ணுக்கும் அவரது மைனர் மகனுக்கும் 20,000 திர்ஹம்கள் அபராதத்தை அபுதாபி நீதிமன்றம் விதித்துள்ளது.
அபுதாபி குடும்பம், சிவில் மற்றும் நிர்வாக நீதிமன்றத்தின் பதிவுகளின்படி, இரண்டு குழந்தைகளும் நண்பர்களாக இருந்தனர். இருப்பினும், ஒரு வாக்குவாதத்தின் போது, அந்தப் பெண்ணும் அவரது மகனும் குழந்தையைத் தாக்கி உடலில் காயங்களை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, சிறுமியை தாக்கிய தாய் மற்றும் மகன் இருவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்தார். உடல், உளவியல் மற்றும் உணர்ச்சி சேதங்களுக்கு 100,000 திர்ஹம் செலுத்த வேண்டும் என்று கோரினார்.
நீதிமன்றம் அந்தப் பெண்ணையும் அவரது மகனையும் குற்றவாளிகளாகக் கண்டறிந்தாலும், அவர்களுக்கு 20,000 திர்ஹம்கள் மட்டுமே அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதில், 10,000 திர்ஹம் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாகச் செல்லும். நீதிமன்றத்தில் ஒருவருக்கு 5,000 திர்ஹம் வீதம் மொத்தம் 10,000 திர்ஹம் அபராதம் செலுத்த வேண்டும்.