Site icon Tamil Gulf

ஷார்ஜாவில் காணாமல் போன இளைஞர் பத்திரமாக மீட்பு

Missing youth safely rescued in Sharjah

ஷார்ஜாவில் ஞாயிற்றுக் கிழமை முதல் காணாமல் போன பாகிஸ்தான் இளைஞர் முகமது அப்துல்லா கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அவரது தந்தை, அலி, இன்று அதிகாலை வெளியிட்ட ஒரு குறுஞ்செய்தி மூலம் இதனை தெரிவித்தார், அவரது மகன் பாதுகாப்பாக இருப்பதாகவும், ஷார்ஜா காவல் துறையின் காவலில் இருப்பதாகவும் அதில் உறுதிப்படுத்தினார்.

நன்றி தெரிவித்த அலி, ஷார்ஜாவின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்பட்ட சவால்களை மீறி தேடுதல் பணியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும், “அவரைக் கண்டுபிடிப்பதற்காக அனைவரும் செய்த அனைத்தையும் நாங்கள் பாராட்டுகிறோம்,” என்று அலி தெரிவித்துள்ளார்.

Exit mobile version