Site icon Tamil Gulf

திங்கட்கிழமை ஷவ்வால் பிறையைக் காண அமைச்சகம் அழைப்பு விடுப்பு

Eid Al Adha 2025: Dhul Hijjah crescent moon sighted in Abu Dhabi

தோஹா, கத்தார்: அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சின் பிறை பார்வைக் குழு, 1445 ரமலான் 29 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை ஷவ்வால் மாதத்தின் பிறையைக் காண நாட்டிலுள்ள அனைத்து முஸ்லீம்களையும் வலியுறுத்தியுள்ளது.

“சந்திரனைக் கவனிப்பவர்கள், தஃப்னா பகுதியில் உள்ள அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சின் கட்டிடத்தில் உள்ள குழுவின் தலைமையகத்திற்கு (டவர்ஸ்) தங்கள் சாட்சியத்தை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குழு மக்ரிப் தொழுகைக்குப் பிறகு உடனடியாக அதன் கூட்டத்தைக் கூட்டும்” என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு ஈத் அல் பித்ர் தொழுகைக்கு இடமளிக்க கத்தார் முழுவதும் 642 மசூதிகள் மற்றும் பிரார்த்தனை இடங்கள் தயார் செய்யப்படும் என்று அமைச்சகம் ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version