Site icon Tamil Gulf

குவைத்தின் 18வது மனிதாபிமான விமானம் காசாவுக்கு புறப்பட்டது!

Kuwait's 33rd flight carrying 10 tons of emergency relief aid to Gaza

குவைத்
குவைத்தின் 18வது மனிதாபிமான விமானம் ஞாயிற்றுக்கிழமை அல்-அரிஷ் விமான நிலையம் வழியாக காசாவுக்கு புறப்பட்டது. விமானத்தில் சுமார் 40 டன் உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஏற்றிச் சென்றது.

சர்வதேச இஸ்லாமிய அறக்கட்டளையின் (IICO) ஒத்துழைப்புடன், பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சகங்களின் ஒருங்கிணைப்புடன் அல்-சலாம் தொண்டு சங்கம் இதை ஏற்பாடு செய்துள்ளது.

இஸ்லாமிய அமைப்பின் தலைவரான டாக்டர் அப்துல்லா அல்-மாத்தூக் கூறுகையில், இந்த நாளின்படி அந்த அமைப்பு காசாவில் மனிதாபிமான திட்டங்களுக்காக 3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்தார்.

அல்-சலாம் அறக்கட்டளையின் இயக்குநர்கள் குழுவின் தலைவரான டாக்டர். நபீல் அல்-அவுன் கூறுகையில், காசாவிற்கு வரவிருக்கும் பயணங்களில் அனுப்பப்படும் 200 டன் திறன் கொண்ட கூடுதல் நிவாரண சுமைகளை ஏற்பாடு செய்ய இரு தொண்டு நிறுவனங்களும் தயாராக உள்ளது. மனிதாபிமான விமானப் பாலம் நிறுவப்பட்டதிலிருந்து, முன்னுரிமைகளை ஒருங்கிணைக்க பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் சொசைட்டியுடன் இணைந்து பணியாற்றியதாக அவர் கூறினார்.

உணவுப் பொருட்களைத் தவிர, இந்த விமானத்தில் ஆறு டீசல் இயந்திரங்கள் உள்ளன, இவை அனைத்தும் மருத்துவமனைகளுக்கு சக்தி அளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது, அத்துடன் 30 சூரிய சக்தி குளிர்சாதன பெட்டிகள், 800 க்கும் மேற்பட்ட முதலுதவி பெட்டிகள், 10,000 மருத்துவ தர முகமூடிகள் மற்றும் காயங்களை சுத்தம் செய்யும் இயந்திரங்கள் ஆகியவை அனுப்பப்பட்டுள்ளது.

Exit mobile version