அமீரக செய்திகள்இந்தியா செய்திகள்குவைத் செய்திகள்

குவைத் தீ: கேரளாவை சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு UAE தொழிலதிபர்கள் இழப்பீடு

ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தொழிலதிபர் MA யூசுப் அலி குவைத்தில் கட்டிடத் தீ விபத்தில் உயிரிழந்த சிலரின் குடும்பங்களுக்கு ரொக்க இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்துள்ளார். லுலு குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர், தென்னிந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தோராயமாக 22,000 திர்ஹம் இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்தார்.

புதன்கிழமையன்று வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 49 பேர் கொல்லப்பட்டனர். மங்காஃப் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 40 இந்தியர்கள் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பலியான இந்தியர்களில் பெரும்பாலானோர் கேரளாவை சேர்ந்தவர்கள்.

இந்த இழப்பீட்டுத் தொகையை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்க உள்ளதாக யூசுப் அலி தெரிவித்தார். கேரளாவில் வசிக்காத கேரள மக்களின் நலனை உறுதி செய்வதற்காக நார்கா ரூட்ஸ் என்ற நிறுவனம் மூலம் நிதி விநியோகம் செய்யப்படும்.

துபாயைச் சேர்ந்த மற்றொரு தொழிலதிபர் ரவிப்பிள்ளையும் அதே நிறுவனம் மூலம் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தோராயமாக 9,000 திர்ஹம் இழப்பீடு வழங்கியுள்ளார்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button