Site icon Tamil Gulf

கனமழை எதிரொலி: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்கள் ரத்து

300% hike in airfare to visa-free countries ahead of next public holiday

தென்னிந்திய நகரம் கனமழையால்(Heavy rain) தத்தளித்து வருவதை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து சென்னைக்கு வரும் பல விமானங்கள் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டன. நகரத்தில் உள்ள சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் பொது வசதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

“கடுமையான வானிலை காரணமாக” திங்கள்கிழமை இரவு 11 மணி வரை விமானநிலையம் மூடப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய ஆபரேட்டர் தெரிவித்தார்.

டிசம்பர் 4 அன்று அபுதாபி மற்றும் சென்னை இடையே இரண்டு விமானங்களை (EY246/247 மற்றும் EY270/271) ரத்து செய்ததாக Etihad Airways தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில் டிசம்பர் 5 ஆம் தேதி பெரிய விமானத்தை இயக்க ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு விமான நிலைய ஊழியர்கள் உதவுவார்கள் என்று விமானச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார் .

மேலும், “சென்னையில் நிலவும் வானிலை காரணமாக இன்றும், நாளையும் அப்பகுதிக்கான சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்படும். எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் சமீபத்திய விமானத் தகவலைப் பெறுவதை உறுதிசெய்ய, பயணிகளின் தொடர்பு விவரங்கள் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிசெய்யுமாறு விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் பயணங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக நாங்கள் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

ஏர் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எங்கள் அடுத்த விமானம் இரவில் சென்னையில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பறக்கும். இன்றிரவு வரை ஓடுபாதை மூடப்பட்டுள்ளது. நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம், மேலும் விமானத்தின் நேரம் குறித்த தகவலை வெளியிடுவோம்” என்றார்.

Exit mobile version