Site icon Tamil Gulf

சீரற்ற காலநிலையின் போது கவனமாக செயல்படுமாறு துபாய் காவல்துறை எச்சரிக்கை

Chance of heavy rain in UAE this week

Dubai: சீரற்ற காலநிலையின் போது நீர்வீழ்ச்சிகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு துபாய் காவல்துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. வாகனத்தின் வேகத்தைக் குறைத்தல், வாகனங்களுக்கு இடையே போதிய பாதுகாப்பு தூரத்தை அனுமதித்தல் மற்றும் வாகனம் ஓட்டும் போது கவனம் சிதறாமல் இருத்தல் போன்ற போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

மேலும் வானிலை தொடர்பான ஆபத்துகளுக்கு தயாராகும் வகையில் அவசர அறிக்கைகளைக் கையாளும் நடவடிக்கைகளை துபாய் காவல்துறை நிறைவு செய்துள்ளது. குறிப்பாக மலைப்பகுதிகள் மற்றும் பள்ளத்தாக்குகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்கள் கடற்கரைகள் மற்றும் மெரினாக்களுக்குச் செல்லும்போது துபாய் நகராட்சி மற்றும் காவல்துறை வழிகாட்டுதல்களைப் பின்பற்ற கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

குறிப்பாக சிவப்புக் கொடி எச்சரிக்கை மறு அறிவிப்பு வரும் வரை நீச்சல் மற்றும் படகோட்டம் தடை செய்யப்படுவதைக் குறிக்கிறது. அவசர விஷயங்கள் மற்றும் பொது விசாரணைகளுக்கு துபாய் காவல்துறையின் அவசர எண்களான 999 மற்றும் 901ஐ தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version