Site icon Tamil Gulf

துபாய்: பள்ளிக் கட்டண உயர்வு அறிவிப்பை பெறத் தொடங்கிய பெற்றோர்கள்

1.1 million students returned to schools after summer vacation

துபாய் பள்ளிகளில் சில பெற்றோர்கள் வரவிருக்கும் கல்வியாண்டிற்கான பள்ளிக் கட்டணங்கள் அதிகரிப்பு தொடர்பான அறிவிப்புகளைப் பெறத் தொடங்கியுள்ளனர்.

இந்தியப் பள்ளிகள் தங்கள் கல்வி அமர்வை ஏப்ரலில் தொடங்கினாலும், சர்வதேச பாடத்திட்டப் பள்ளிகள் செப்டம்பரில் தங்கள் கல்வி அமர்வைத் தொடங்கும். துபாயில் உள்ள தனியார் பள்ளிகள் சமீபத்திய வருடாந்திர ஆய்வுகளில் எவ்வாறு தேர்ச்சி பெற்றன என்பதைப் பொறுத்து 5.2 சதவீதம் வரை கட்டணத்தை அதிகரிக்க அனுமதிக்கப்பட்டதை அடுத்து இந்த கட்டண உயர்வு வந்துள்ளது. மதிப்பீடுகள் குறைந்த பள்ளிகள் எந்த கட்டண உயர்விற்கும் விண்ணப்பிக்க தகுதியற்றவையாக கருதப்படும்..

ஏப்ரல் தொடக்கத்தில், துபாயின் கல்வி ஒழுங்குபடுத்தும் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA) 2.6 சதவீத கல்வி செலவு குறியீட்டை (ECI) அறிவித்தது, அதன் அடிப்படையில் பள்ளிகள் 2024-25 கல்வியாண்டுக்கான கட்டணத்தை மாற்றியமைக்கலாம்.

Exit mobile version