Site icon Tamil Gulf

காசா பகுதிக்கு ஆம்புலன்ஸ்களை நன்கொடையாக அளித்த துபாய் கோடீஸ்வரர்!

Dubai billionaire donates ambulances to Gaza

Dubai: ஒற்றுமை மற்றும் இரக்கத்தின் வெளிப்பாடாக, துபாய் கோடீஸ்வரர் கலாஃப் அஹ்மத் அல் ஹப்தூர் காசா பகுதியில் சுகாதார ஆதரவை வழங்குவதற்காக முழு வசதியுடன் கூடிய பல ஆம்புலன்ஸ்களை நன்கொடையாக அளித்துள்ளார். X-ல் அல் ஹப்தூர் குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல் ஹப்தூர், நவம்பர் 26, ஞாயிற்றுக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

“காசா பகுதியில் உள்ள நமது சகோதரர்கள் மீதான நமது தவிர்க்க முடியாத மனிதாபிமானக் கடமையில் நம்பிக்கை வைத்து, சுகாதார நிலைமையை மேம்படுத்த, சமீபத்திய மருத்துவ தொழில்நுட்பங்களுடன் கூடிய பல ஆம்புலன்ஸ்களை நன்கொடையாக வழங்கியுள்ளேன்” என்று அல் ஹப்தூர் X-ல் பதிவிட்டுள்ளார்.

எகிப்தில் உள்ள அல் ஹப்தூர் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இஸ்லாம் கமால் கோனிம் கூறுகையில், எகிப்திய ரஃபா எல்லை வழியாக பாலஸ்தீனிய ரெட் கிரசன்ட் (PRC) க்கு முதல் தொகுதி ஆம்புலன்ஸ்கள் சமீபத்தில் வழங்கப்பட்டது. பாலஸ்தீனத்தை நோக்கிய நமது நிலைப்பாடு உறுதியானது, எழுபதுகளில் இருந்து அதன் மக்களுக்கான எங்கள் ஆதரவு ஒருபோதும் நிறுத்தப்படவில்லை. அவர்களின் துன்பங்களுக்கு நாங்கள் வலியை உணர்கிறோம், மேலும் அதில் ஒரு சிறிய பகுதியைக் கூட போக்க எல்லா வகையிலும் முயற்சி செய்கிறோம். அதைச் செய்ய எங்களுக்கு உதவிய கடவுளுக்கு ஸ்தோத்திரம்.” என்று தெரிவித்தார்.

Exit mobile version