Site icon Tamil Gulf

COP28: பருவநிலை மாற்ற பதிப்பில் இருந்து ஏழை நாடுகளை மீட்க 30 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கிய அமீரகம்

COP28: UAE allocates $30 billion to help poor countries recover from climate change

Dubai – COP28
பருவநிலை மாற்றத்தின் பாதிப்பில் இருந்து ஏழை நாடுகளை காப்பாற்ற ஐக்கிய அரபு அமீரகம் 30 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது. ஐ.நா.வின் காலநிலை உச்சி மாநாட்டில் இதற்கு உலக நாடுகள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளன. உச்சிமாநாட்டின் தலைவர் (COP 28) ஐக்கிய அரபு அமீரகம் பணக்கார நாடுகளின் ஒத்துழைப்புடன் சேகரிக்கப்படும் நிதிக்கு 10 மில்லியன் டாலர்களை பங்களிக்கும் என்று சுல்தான் அல் ஜாபர் அறிவித்தார்.

சேதங்களை குறைக்க ஜெர்மனி 10 கோடியும், இங்கிலாந்து 7.5 கோடியும், அமெரிக்கா 1.75 கோடியும், ஜப்பான் 10 கோடியும் வழங்குவதாக அறிவித்துள்ளன. வரும் நாட்களில் இந்த திட்டத்தில் பல்வேறு நாடுகள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவநிலை மாற்றத்திலிருந்து பூமியைக் காப்பாற்ற உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று டாக்டர். சுல்தான் அல் ஜாபர் கேட்டு கொண்டார்.

மேலும், நாம் அழிவின் விளிம்பில் இருக்கிறோம் என்பதை அறிவியல் உறுதிப்படுத்துகிறது. 2015 பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கு எட்டப்படவில்லை. 2030க்கான பாதை திறக்கப்பட்டுள்ளது. இங்கே நாம் ஒன்றுபட வேண்டும். நாடுகளின் அணுகுமுறை மாற வேண்டும். இதில் அனைவருக்கும் பங்கு உண்டு என்று கூறினார்.

Exit mobile version