Site icon Tamil Gulf

மூன்று நாட்கள் மழைக்கு வாய்ப்பு; கடல் அலைகள் 2.5 மீட்டர் வரை உயரும்

Chance of rain in some parts of the country today

பிப்ரவரி 28 முதல் மார்ச் 1, 2024 வரை மூன்று நாட்களுக்கு வடமேற்குக் காற்றின் செயல்பாடுகளுடன் கடல் அலைகள் 2.0-2.5 மீட்டர் வரை உயரும் என ஓமன் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. .

ஓமன் வானிலை ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிப்ரவரி 28 புதன்கிழமை மாலை முதல் கடல் அலைகள் 2.0-2.5 மீட்டர் உயரம் வரை முசாண்டம் கவர்னரேட் மற்றும் ஓமன் கடலின் கரையோரங்களில் எழும்பும். மார்ச் 1 வெள்ளிக்கிழமை வரை, வடமேற்குக் காற்றின் செயல்பாட்டோடு ஒத்துப்போகும். எனவே கடல் நடவடிக்கைகளுக்குச் சென்று பயிற்சி செய்வதற்கு முன், தயவுசெய்து கடல் நிலையைச் சரிபார்க்கவும்” என்று கூறியது.

பிப்ரவரி 28, 2024 புதன்கிழமை முதல் மார்ச் 1, 2024 வெள்ளிக்கிழமை வரை ஓமன் சுல்தானகத்தின் வடக்கு கவர்னரேட்டுகளில் தனிமைப்படுத்தப்பட்ட மழை எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை காலை முதல் அல் புரைமி, அல் தாஹிரா மற்றும் வடக்கு அல் பதினா மாகாணங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது படிப்படியாக மதியம் மற்றும் மாலை வேளையில் மஸ்கட், தெற்கு அல் பத்தினா, அல் தகிலியா, வடக்கு அல் ஷர்கியா, உள்ளிட்ட பகுதிகளுக்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு அல் ஷர்கியா மற்றும் தெற்கு அல் ஷர்கியாவில் பரவலாக மழை பெய்து வருவதால், வெள்ளிக்கிழமை முதல் வானிலை படிப்படியாக பலவீனமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், மழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காலங்களில் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அனைவரையும் அறிவுறுத்தியது.

Exit mobile version