Site icon Tamil Gulf

ஜூன் 1-ம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பைகளுக்கு தடை

Ban on single-use bags from June 1

பிளாஸ்டிக் மற்றும் காகிதம் உட்பட ஒருமுறை பயன்படுத்தும் பைகளுக்கு துபாய் முழுவதும் விதிக்கப்பட்ட தடை மூன்று மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு 25 பில் கட்டணத்தை விதிக்க வணிகங்களை எமிரேட் கட்டாயப்படுத்தியுள்ளது. ஜூன் 1 முதல், துபாயில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்கள் முழுவதும் அனைத்து ஒற்றை உபயோகப் பைகளும் தடைசெய்யப்படும்.

இந்தக் கொள்கையானது பொருட்களை எடுத்துச் செல்வதற்கு ஒருமுறை பயன்படுத்தும் பைகளை தவிர்த்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய கேரியர்களைக் கொண்டு வர ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

துபாய் முனிசிபாலிட்டி வியாழன் அன்று வெளியிட்ட விழிப்புணர்வு வழிகாட்டியில், தடை செய்யப்பட்ட பைகளில் மக்கும் தன்மையுடையவை அடங்கும் என்று குடிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

“மக்கும் பைகளுக்கு அவற்றின் சொந்த மறுசுழற்சி நிலையங்கள் தேவை. குப்பைக் கிடங்குகளில் விடப்பட்டால், அவை விலங்குகளால் உட்கொள்ளப்படக்கூடும்”என்று வழிகாட்டியில் நகராட்சி கூறுகிறது.

Are you looking for Large Canvas Blank Order Now from sandhai. Large and Extra Large canvases get delivered in your doorstep. Cash on Delivery Available.

Exit mobile version