Site icon Tamil Gulf

துபாய் பள்ளிகளில் AI- தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்- ஷேக் ஹம்தான்

The Crown Prince of Dubai was appointed as the Defense Minister

துபாய் பள்ளிகளில் விரைவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

புதன்கிழமை, துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம், எமிரேட் பள்ளிகளில் ஆசிரியர்களை மேம்படுத்தும் திட்டத்தை தொடங்குவதாக அறிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளை விரைவுபடுத்தும் துபாயின் வருடாந்திர திட்டத்திற்கு ஏற்ப இந்த திட்டம் உள்ளது.

AI யை தங்கள் கற்பித்தல் நடைமுறைகளில் திறம்பட ஒருங்கிணைக்கும் முதல் 10 ஆசிரியர்கள் 2025 AI Retreat-ல் கௌரவிக்கப்படுவார்கள்.

“எங்கள் மாணவர்களை எதிர்காலத்தில் தயார்படுத்தும் கருவிகள் மற்றும் AI தொழில்நுட்பங்களால் ஆதரிக்கப்படும் உகந்த கற்றல் சூழலை வழங்கும் ஒரு கல்வி முறையை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என ஷேக் ஹம்தான் கூறினார்.

Exit mobile version