80 பேரீச்சம்பழ மரங்களை நட்ட தாவூதி போஹ்ரா தலைவர்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சாதகமான காலநிலை நடவடிக்கையை ஊக்குவிக்கவும், நிலையான வளர்ச்சியை மேம்படுத்தவும் அல் குசைஸில் 80 உள்நாட்டு பேரீச்சம்பழ மரங்களை நடுவதை தாவூதி போஹ்ரா தலைவரான சுல்தான் அல் போஹ்ரா சையத்னா முஃபத்தால் சைஃபுதீன் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தை துவக்கி வைக்க, துபாய் முனிசிபாலிட்டியின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் அல் குசைஸில் உள்ள புர்ஹானி மஸ்ஜித் அருகே உள்ள நீர்த்தேக்கத்தில் சையத்னா சைபுதீன் பேரீச்சம்பழ மரத்தை நட்டார். 80 பேரீச்சம்பழ மரங்களை நடும் முயற்சியானது தாவூதி போஹ்ராவின் உலகளாவிய தொண்டு முயற்சியின் ஒரு பகுதியாகும்.
உலகின் முன்னணி பேரீச்சம்பழ உற்பத்தியாளர்களில் ஐக்கிய அரபு அமீரகம் இருப்பதால் பொருளாதாரத்தில் பேரீச்சம்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. பேரீச்சம்பழ உற்பத்தி பல விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது மற்றும் எமிரேட்ஸின் ஏற்றுமதி வருவாயில் பங்களிக்கிறது. பேரீச்சம்பழ தோப்புகளின் இருப்பு உள்ளூர் பல்லுயிர் பெருக்கத்திற்கு பங்களிக்கிறது, பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை ஆதரிக்கிறது.



