Site icon Tamil Gulf

18 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 5 இந்தியர்கள் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தனர்

5 Indians reunited with family after 18 years released from jail

துபாயில் 18 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர், அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். பிப்ரவரி 20 ஆம் தேதி ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் ஐந்து பேரும் தங்கள் குடும்பங்களுடன் உணர்ச்சிவசப்பட்ட மறு சந்திப்பில் ஈடுபட்டதாக தெலுங்கானா வளைகுடா என்ஆர்ஐ பிரிவின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.ரெட்டி தெரிவித்தார்.

சிவராத்திரி மல்லேஷ், சிவராத்திரி ரவி, கொல்லெம் நம்பல்லி, துண்டுகுல லக்ஷ்மன் மற்றும் சிவராத்திரி ஹன்மந்து ஆகிய ஐந்து பேரும் தெலுங்கானாவின் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சோனாபூர் தொழிலாளர் முகாமில் வசிக்கும் அவர்கள் துபாயில் கட்டுமானத் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

2005ஆம் ஆண்டு அவர்களுக்கும் நேபாள காவலர் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், வாய் சண்டை கைகலப்பாக மாறியது. இதில் காவலர் துரதிர்ஷ்டவசமாக மரணம் அடைந்தார். அவர்கள் எந்த தவறான நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை, (மரணம்) தற்செயலாக நடந்திருக்க வேண்டும் என்று ரெட்டி கூறினார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து துபாய் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. “ஆரம்பத்தில், அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டிற்குப் பிறகு, தண்டனை 25 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது”

அவர்களின் ஆரம்பகால விடுதலை செயல்முறையை விளக்கிய ரெட்டி, சமூகக் குழுக்கள், இந்திய துணைத் தூதரகம் மற்றும் தெலுங்கானா அரசாங்கத்தின் ஈடுபாட்டின் மூலம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 18 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தெலுங்கானா அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் இறந்த காவலாளியின் குடும்பத்தை நேரில் சந்தித்து, ஐந்து பேரையும் விடுவிக்க ‘ஆட்சேபனை இல்லாச் சான்றிதழை’ கோரினார். பின்னர் அமைச்சர் துபாய் சென்று, உள்ளூர் அதிகாரிகளிடம் முறையிட்டார்.

ஐந்து பேரும் பிப்ரவரி 18 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். “அவர்களிடம் கடவுச்சீட்டு மற்றும் பயணிப்பதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. அவர்கள் நாடு திரும்புவதற்கு இந்திய துணைத் தூதரகம் வெள்ளை பாஸ்போர்ட்டை வழங்க உதவியது.

“தனிநபர்களை விடுவிப்பதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள், இந்திய தூதரகம் மற்றும் தெலுங்கானா அரசாங்கத்தின் பங்கிற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று ரெட்டி கூறினார்.

Exit mobile version