Japan Earthquake:
ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக இஷிகாவா மாகாணத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவித்ததாக கியோடோ செய்தி நிறுவனம் செவ்வாய்கிழமை அதிகாலை செய்தி வெளியிட்டுள்ளது.
திங்களன்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஹொன்ஷுவின் பிரதான தீவின் ஜப்பான் கடலில் உள்ள மாகாணத்தைத் தாக்கியது, இதனால் ஒரு மீட்டர் உயரத்திற்கு மேல் சுனாமி அலைகள் எழும்பி வீடுகளை சேதப்படுத்தியது மற்றும் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) ஆரம்பத்தில் ஒரு பெரிய சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இப்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ இராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டனர்.