ஷார்ஜாவில் மலைப்பகுதியில் சிக்கிய 3 பேரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அவசரகால மீட்பு குழுவினர் மீட்டனர்.
கல்பா நகரில் கரடுமுரடான மலைப் பகுதியில் சிக்கிக் கொண்ட அவர்களை தேசிய காவலர்களின் தேசிய தேடல் மற்றும் மீட்பு மையம், ஷார்ஜா காவல்துறையின் ஒருங்கிணைப்புடன் மீட்டது.
மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் தேவையான சிகிச்சைக்காக கல்பா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.