முக்கிய சாலைகளில் விபத்து ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு துபாய் காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
பிசினஸ் பே கிராசிங் பாலத்தில் விபத்து நடந்ததாக காவல்துறை தங்களது அதிகாரப்பூர்வ ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
பர் துபாயில் இருந்து டெய்ரா நோக்கி வந்த திசையில் இந்த விபத்து நடந்ததாக ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.