Site icon Tamil Gulf

போதைப்பொருளை உட்கொள்ளும்படி பிறரைத் தூண்டினால் 50,000 திர்ஹம்ஸ் அபராதம்

Notification of penalties for drug abuse

துபாயின் பப்ளிக் பிராசிகியூஷன், போதைப்பொருளை உட்கொள்ளும்படி பிறரைத் தூண்டுவது குற்றம் என்றும், அவ்வாறு செய்பவர்களுக்கு சிறைத் தண்டனையும், மிகப்பெரிய அபராதமும் விதிக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.

மற்றொரு நபரை போதை மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்களை துஷ்பிரயோகம் செய்ய தூண்டுவது குற்றமாக கருதப்படும் என்றும், இந்த குற்றத்திற்கு குறைந்தது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 50,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், போதை மருந்துகள் அல்லது சைக்கோட்ரோபிக் பொருட்களை வாங்க மற்றும் பயன்படுத்துவதற்கான நோக்கத்துடன் பணத்தை மாற்றுவதற்கு கடுமையான அபராதங்களும் உள்ளன .

2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணை-சட்ட எண். 30 இன் பிரிவு 64/1 இன் படி, ஒரு நபர் போதைப்பொருள் வாங்க அல்லது பயன்படுத்துவதற்காக பணத்தை டெபாசிட் செய்தாலோ அல்லது பரிமாற்றம் செய்தாலோ, சிறைத்தண்டனை தண்டனை கொடுக்கப்படும் அல்லது 50,000 க்கு குறையாத அபராதம். மேலும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு நிதியளிப்பவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் 50,000 க்கு குறையாத அபராதம் விதிக்கப்படலாம்.

Exit mobile version