Site icon Tamil Gulf

பிரிக்ஸ் உச்சி மாநாடு: சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்

saudi minister in brics summit

15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் செவ்வாய்க்கிழமை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றதாக அரசு செய்தி நிறுவனமான SPA தெரிவித்துள்ளது. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சார்பாக சவுதி தூதுக்குழுவிற்கு அமைச்சர் தலைமை தாங்குவார்.

ஜோகன்னஸ்பர்க்கில் ஆகஸ்ட் 22-24 வரை நடைபெறும் இந்த உச்சிமாநாட்டின் போது, இளவரசர் பைசல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல பிரதிநிதிகள் மற்றும் உயரதிகாரிகளை சந்திப்பார் என்று SPA தெரிவித்துள்ளது. உறுப்பு நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவை உள்ளடக்கிய மூன்று நாள் உச்சிமாநாட்டில், 40க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் சர்வதேச பிரமுகர்கள் வரவேற்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்க வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் இப்ராஹிம் படேல் செவ்வாயன்று உச்சிமாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவைத்தார். கூட்டத்தில் விவசாயம், சுரங்கம், எரிசக்தி, கல்வி, காலநிலை மாற்றம், நாணயக் கொள்கை மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் அதிக ஒத்துழைப்புக்கான பொதுவான அழைப்புகளுடன், பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறும்.

Exit mobile version