Site icon Tamil Gulf

தேவைப்படும் நாடுகள் மற்றும் மக்களுக்கு உணவு கூடைகளை வழங்கிய சவுதி அரேபியா!!

KSrelief distributed foods to the needy families

சவூதி அரேபியாவின் கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) மூலம் ஏமன் மரிப் பகுதியில் மிகவும் தேவைப்படும் குடும்பங்களுக்கு 6,000 அட்டைப் பேரீச்சம்பழங்களை விநியோகித்துள்ளது, இதன் மூலம் 36,000 பேர் பயனடைந்துள்ளனர்.

மௌரிடானியாவின் நௌவாக்சோட்டில் உள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு 10,021 உணவு கூடைகளை இந்த மையம் விநியோகித்துள்ளது. இதன் மூலம் சுமார் 60,126 பேர் பயனடைந்தனர். அதேபோல், KSrelief அதிகாரிகள் மடகாஸ்கருக்கும் பல்வேறு உணவு உதவிகளை வழங்கினர்.

மடகாஸ்கரின் இடர் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான தேசிய அலுவலகத்தின் தலைமை இயக்குநர் ஜெனரல் எலாக் ஆலிவியர் ஆண்ட்ரியகாஜா, KSrelief வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

உலகெங்கிலும் தேவைப்படும் நாடுகள் மற்றும் மக்களுக்கு சவுதி அரேபியாவின் மனிதாபிமான மற்றும் நிவாரணத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உதவி உள்ளது.

Exit mobile version