Site icon Tamil Gulf

துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் எண்ணிக்கை 88 மில்லியனாக உயரும்- மஜீத் அல் ஜோக்கர்

DXB record to welcome 44.9 million guests in first six months of 2024

துபாய் விமான நிலையத்தின் தலைமை இயக்க அதிகாரி மஜீத் அல் ஜோக்கர், அடுத்த ஆண்டு துபாய் சர்வதேச விமான நிலையத்தின் மூலம் பயணிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 88 மில்லியன் பயணிகளாக அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு பயணிகளின் எண்ணிக்கை 83.6 மில்லியனில் இருந்து 85 மில்லியனாக உயரும் என துபாய் ஏர்போர்ட்ஸ் தனது எதிர்பார்ப்புகளை திருத்தியுள்ளது. உள்ளூர் ஊடகங்களுக்கு அல் ஜோக்கர் அளித்த அறிக்கையில் கூறியதாவது:-

துபாய் சர்வதேச விமான நிலையத்தின் திறன் தற்போது சுமார் 100 மில்லியன் பயணிகளை எட்டியுள்ளது, மேலும் நடைமுறைகளை மேம்படுத்தி, தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதன் மூலம் விமான நிலையத்தின் திறனை சுமார் 120 மில்லியன் பயணிகளுக்கு உயர்த்துவதற்கான திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

துபாய் சர்வதேச விமான நிலையத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் இயக்கத்தின் சீரான தன்மையை அதிகரிக்கவும், விமான நிலையத்திற்குள் நெரிசலைக் கணிசமாகக் குறைக்கவும் உதவியுள்ளன. நெரிசலைக் குறைப்பதில் ஸ்மார்ட் கேட்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என்று அல் ஜோக்கர் கூறினார்.

Exit mobile version