Site icon Tamil Gulf

கால்பந்து லீக்… வன்முறையில் ஈடுபட்டால் 30,000 திர்ஹம்கள் வரை அபராதம்!!

uae police issue warning

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிறந்த தொழில்முறை கால்பந்து லீக் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள நிலையில் ரசிகர்கள் விதிகளையும் பின்பற்றுமாறு துபாய் காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் கூட்டாட்சி சட்டத்தை மேற்கோள் காட்டி, வன்முறையில் ஈடுபடும் ரசிகர்களுக்கு 30,000 திர்ஹம்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

நாளை தொடங்கவுள்ள அட்னாக் புரோ லீக்கில் ரசிகர்கள் பின்பற்ற வேண்டிய விதிகளை, பாதுகாப்பு மற்றும் அவசரநிலைத் துறையின் இயக்குநர் மேஜர் ஜெனரல் ரஷித் கலீஃபா அல் ஃபலாசி அறிவித்துள்ளார்.

வன்முறையில் ஈடுபடும் ரசிகர்கள் அனுமதியின்றி நியமிக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வு பகுதிக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அல்லது அபாயகரமான பொருட்கள், குறிப்பாக பட்டாசுகளை கொண்டு வரவோ அல்லது வைத்திருக்கவோ கூடாது. ஆயுதம் ஏந்தக்கூடாது. நியமிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அமர வேண்டும்.

மேலே பட்டியலிடப்பட்டுள்ள விதிகளை மீறினால் ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது Dh5,000 முதல் Dh30,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version