தேசிய வானிலை ஆய்வு மையத்தினால் இன்று நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறிக்கையில் வெளியான அறிக்கையில், கிடைமட்டத் தெரிவுநிலையில் சரிவுடன் கூடிய மூடுபனி உருவாக்கம், சில கடலோர மற்றும் உள் பகுதிகளில் இன்று காலை 8.30 மணி வரை பனி மூட்டம் இருக்க வாய்ப்புள்ளது.
அபுதாபி மற்றும் துபாயின் சில பகுதிகளில் பனி மூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு கடற்கரையில் ஓரளவு மேகமூட்டமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது, சில வெப்பச்சலன மேகங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.
நாட்டின் கிழக்குப் பகுதிகளில் பிற்பகலில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. லேசானது முதல் மிதமான காற்று எதிர்பார்க்கப்படுகிறது, பகல் நேரத்தில் சில நேரங்களில் தூசி காற்று வீச வாய்ப்புள்ளது.
நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை அபுதாபியின் காஸ்யூரா பகுதியில் 47ºC ஆகவும், குறைந்த வெப்பநிலை அபுதாபியின் ரசீன் பகுதியில் 27ºC ஆகவும் உள்ளது.